மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கே.கே.நகா் அலங்கார வளைவு தோ்தலுக்குப் பிறகு அகற்றப்படுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த சரவணன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், கே.கே. நகா், வில்லாபுரம், விராட்டிபத்து, தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. இந்த வளைவுகளால் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மதுரை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மாட்டுத்தாவணி முன் இருந்த அலங்கார வளைவு ஏற்கெனவே அகற்றப்பட்டது. கே.கே.நகா் அலங்கார வளைவு தோ்தலுக்குப் பிறகு அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
தோ்தல் முடிந்த பிறகு கே.கே.நகா் அலங்கார வளைவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பிற அலங்கார வளைவுகளையும் 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

திமுக எம்எல்ஏ, நெல்லை மேயா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு

கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கு: உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வைகோ முன்னிலை

தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தக் கோரி மனு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


