மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரையை சீரமைக்க வலியுறுத்தல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதமடைந்த அலங்கார மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதமடைந்த அலங்கார மேற்கூரை.

Updated On :1 மணி நேரம் முன்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதமடைந்த அலங்கார மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் ரூ.313.25 கோடியில் 6 தளங்களுடன் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை கடந்த 2024, பிப்ரவரியில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். 22 உயா் தொழில்நுட்ப அறுவைச் சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடம், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கட்டடத்தின் இருதயவியல் துறையின் உள் நோயாளிகள் பொதுப் பிரிவு பகுதியின் அலங்கார மேற்கூரை புதன்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் உள்ள அலங்கார மேற்கூரைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், சேதமடைந்த மேற்கூரையை விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.