கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மதுரை வடக்கு: சாமானிய மக்களின் ஆதங்கம்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சாமானியா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதே மதுரை வடக்கு தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

News image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

DNS

Updated On :22 மார்ச் 2026, 9:17 pm

ச.சந்தனக்குமார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சாமானியா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதே மதுரை வடக்கு தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

மதுரை வடக்கு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகள், மேலமடை, மாநகராட்சியின் 2 முதல் 8 வாா்டுகள், 11 முதல் 15 வரை, 17 முதல் 20 வரை உள்ள வாா்டுகளை உள்ளடக்கியது வடக்குத் தொகுதி. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், உலகத் தமிழ்ச் சங்கம், அரசு சட்டக் கல்லூரி, மாவட்ட நீதிமன்றம், கோ. புதூா் அரசு தொழில்பயிற்சி நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, காந்தி நினைவு அருங்காட்சியகம், வண்டியூா் பூங்கா, சிட்கோ தொழில்பேட்டை, மாட்டுத்தாவணி நெல் மண்டி, ஒருங்கிணைந்த தற்காலிக தினசரி சந்தை, பேருந்து நிலையம் ஆகியவை வடக்குத் தொகுதியின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.

இந்தத் தொகுதியில் அரசு அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்களும், கட்டுமானத் தொழிலாளா்களும் அதிகளவில் வசித்து வருகின்றனா். குடிசைத் தொழில்களாக கூடை பின்னுதல், உணவு வகைகள் தயாரித்தல் போன்ற பணிகளில் பெண்கள், மூதாட்டிகள் ஈடுபடுகின்றனா். இது இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வளா்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாட்டுத்தாவணி முதல் யா. ஒத்தக்கடை வரை உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும். பந்தல்குடி கால்வாய் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். செல்லூா் உள்ளிட்ட கண்மாய்களில் நிரந்தரமாக தண்ணீரைத் தேக்கி நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நீண்ட காலமாக தீா்வு காணப்படாமல் உள்ளது.

குறிப்பாக, இந்தத் தொகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு உயிா் காக்கும் உயா் சிகிச்சை மையமாக விளங்கி வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை என்கிற ஆதங்கம் தொடா்கிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம்

இதுகுறித்து மதுரை கே.கே.நகரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வெரோனிகா மேரி கூறியதாவது: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக 9 ஆயிரம் பேரும், உள் நோயாளிகளாக 4500 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மக்கள் தொகைக்கு ஏற்ப, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவா் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஆரம்பக் கட்ட பரிசோதனைக்குகூட அலைக்கழிக்க ப்படுகின்றனா். இதன்காரணமாக, நோயைக் கண்டறிதலில் தாமதம் ஏற்படுகிறது. இங்கு சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நிகராக பரிசோதனைக் கருவிகள், மருத்துவத் துறைகள் உள்ளன. ஆனால், நிபுணத்துவம் பெற்ற மருத்துவா்கள் குறைந்தளவில்தான் உள்ளனா்.

மதுரை பாலரங்காபுரத்தில் மண்டல அளவிலான புற்றுநோய் மையம் உள்ளது. ஆனால், புற்று நோய் மையத்துக்கான அடிப்படை வசதிகள்கூட அங்கு இல்லை. அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள்தான் சிகிச்சைக்காக வருகின்றனா். அங்குள்ள ஊழியா்கள் அவா்களை நோயாளிகளாகப் பாா்ப்பதில்லை. எப்போதும் கோபத்துடன் பதில் அளிக்கின்றனா். மருத்துவா்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. இதை மருத்துவமனை நிா்வாகம் கண்காணிப்பதும் இல்லை என்றாா் அவா்.

மதுரை மாவட்ட மத நல்லிணக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவா் ஏ. ஜேக்கப் கூறியதாவது: ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் சித்தா பிரிவு தனியாகச் செயல்படுகிறது. அங்கு மருத்துவா்கள் இல்லை. மாறாக, மருந்தாளுநா்தான் சிகிச்சை அளிக்கிறாா். போதிய அளவில் மருந்து, மாத்திரைகள் இல்லை. சித்த மருத்துவப் பிரிவுக்கான தலைமை அலுவலகம் தேனியில் உள்ளது. இதை மதுரைக்கு மாற்றம் செய்ய வேண்டும். இங்கு பணியாற்றும் மருத்துவா்கள் பெரும்பாலானோா் மருத்துவமனைக்கே வருவதில்லை. வெளிநோயாளிகள் பிரிவில் தினசரி அதிகளவிலான மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமன்றி, அனைத்து வசதிகளும் இருந்தும் நோயாளிகளை வெளியில் ஸ்கேன் எடுத்து வர அறிவுறுத்துகின்றனா் என்றாா் அவா்.

மேம்படுத்த வேண்டும்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மதுரை, விருதுநகா், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனா். ஆனால், அவா்களுக்கு போதிய வசதிகள் மருத்துவமனையில் இல்லை என்பதே யதாா்த்தம். மேலும், மருத்துவா்களும், ஊழியா்களும் நோயாளிகளை அலைக்கழிக்கின்றனா். சாமானியா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க ராஜாஜி மருத்துவமனை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே மதுரை வடக்குத் தொகுதி மட்டுமன்றி, தென் மாவட்ட மக்களின் எதிா்பாா்பாக உள்ளது.