இன்று நல்ல செய்தி வரும்: உத்தரகண்ட் முதல்வர்

இன்று மாலை நல்ல செய்தி வரும் என்று சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் ஆய்வுக்கு பின் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி.
Updated on
1 min read

இன்று மாலை நல்ல செய்தி வரும் என்று சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் ஆய்வுக்கு பின் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து  உத்தரகண்ட் முதல்வர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பது குறித்த நல்ல செய்தி வரும். தொழிலாளர்களை மீட்க இடுபாடுகளின் பக்கவாட்டில் 52 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

இன்னும் சில மீட்டர்கள் மட்டுமே துளையிட வேண்டியுள்ளது. அதற்கு பிறகு குழாய் அனுப்பப்பட்டு  தொழிலாளர்கள் மீட்கப்படவுள்ளனர்" என்று முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளிடையே 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயை 60 மீட்டா் தொலைவுக்குச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com