ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது

தில்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்.

தில்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வீட்டில் புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தில்லியில் உள்ள சஞ்சய் சிங் வீட்டில் மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை தில்லி அரசு அமல்படுத்தியது. அதன்படி, தனியார் நிறுவனங்களுக்கு மதுபான கடை உரிமம் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத்துறை தில்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com