47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகாராஷ்டிரம்: மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலியானார். 

News image
கோப்புப் படம்
Updated On :13 அக்டோபர் 2023, 11:22 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், பிதர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் மகாதேவ் சக்ரே. 16 வயதான அந்த இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள லத்தூர் வந்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் லட்சுமி காலனியில் உள்ள 3மாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்தார். 
அப்போது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் இருந்து சக்ரே தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சக்ரே சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து மரணம் என சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.