கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கர்நாடக முன்னாள் முதல்வருக்கு இதய அறுவை சிகிச்சை!

கா்நாடக பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2023, 6:42 pm

DIN

கா்நாடக பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் திங்கள்கிழமை கா்நாடக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு (63) இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கரோனரி தமனிக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:

இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் ஓய்வெடுத்து வருகிறேன். எனது உடல்நிலை முழுமையாக குணமடைந்த பிறகு வழக்கமான பணிகளைக் கவனிக்க வெகுவிரைவில் வருவேன்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை மருத்துவமனையில் சந்திக்க வந்தால் அது பிற நோயாளிகளுக்குத் தொந்தரவாக இருக்கும். எனவே, என்னைச் சந்திக்க யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகள் என்னை மனதளவில் வலிமையாக்கியுள்ளது. வெகுவிரைவில் மக்கள் பணியாற்ற வருவேன். நான் நலம் பெற வேண்டும் என வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நெஞ்சாா்ந்த நன்றி என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.