ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்று (அக்டோபர் 22) இரவு 11 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இத்தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகள் எதுவும் ஏற்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிக்க: சேரன் படத்தில் இணையும் கேஜிஎஃப் பட நாயகி!
ஏற்கனவே நேபாளத்தில் நேற்று (அக்டோபர் 22) காலை 7.24 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும், மாலை 5.18 மணிக்கு 4.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதனால் பல வீடுகள் முழுவதுமாக அல்லது பகுதியாக இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் நேபாள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். வீடுகளுக்கு செல்ல தயங்கி வீதிகளில் இருந்து வருகின்றனர்.
நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: காங்கிரஸ் முன்னாள் தலைவா் தங்கபாலு

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


