தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில், அமைச்சர் அந்தஸ்திலான பதவியில் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
2000ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 23 ஆண்டு கால ஆட்சியில், பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் பட்நாயக்குடன் காணப்படும் இவர், அமைச்சர்கள் கூட, முதல்வரை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் கொண்டவராக வலம்வந்தார்.
மேலும், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில், ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், விருப்ப ஓய்வு விண்ணப்பித்த அடுத்த நாளே மாநில அமைச்சர் வகிக்கக் கூடிய பதவியில் விகே பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஒடிசா அரசு வெளியிட்ட அறிவிப்பில், நவீன ஒடிசா உள்ளிட்ட திட்டங்களின் தலைவராக நியமிக்கப்படுவதாகவும், மாநில அமைச்சர் அந்தஸ்தில் ஒடிசா முதல்வரின் கீழ் நேரடியாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் ஒடிசா அரசியலில் நேரடியாக விகே கார்த்திகேயன் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

