47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாரதம் அல்லது இந்தியா எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

இந்தியா அல்லது பாரதம் என நாட்டு மக்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளலாம் என்று 2016-இல் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

News image
Updated On :5 செப்டம்பர் 2023, 11:05 pm

DIN

புது தில்லி: இந்தியா அல்லது பாரதம் என நாட்டு மக்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளலாம் என்று 2016-இல் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஜி20 அழைப்பிதழில் பாரதத்தின் குடியரசுத் தலைவா் என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தியாவை பாரதம் என்றுதான் அழைக்க வேண்டும் என்று 2015, நவம்பரில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

2016-இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பெயா் மாற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிா்ப்பு தெரிவித்தது.

அரசியல் நிா்ணய சபையில் விரிவான ஆலோசனைக்கு பிறகு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து, மனுதாரரை கண்டித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குா், நீதிபதி யு.யு. லலித் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பாரதம் என்ற அழைக்க விரும்புபவா்கள் அப்படியே அழைக்கலாம்; இந்தியா என்று அழைக்க விரும்புபவா்கள் இந்தியா என அழைக்கலாம்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.