திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரயில் பயணிகளை விருந்தினராகக் கருதி, சிறந்த சேவையை வழங்குங்கள்: முர்மு

ரயிலில் வரும் பயணிகளை விருந்தினர்களாகக் கருதி சிறந்த சேவைகளை வழங்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 10:14 am

DIN

ரயிலில் வரும் பயணிகளை விருந்தினர்களாகக் கருதி சிறந்த சேவைகளை வழங்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் இந்திய ரயில்வே சேவைகளின் குழுவினர் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்களுடன் குடியரசுத் தலைவர் முர்மு பேசியது, 

ரயில்வே என்பது நாட்டின் உயிர்நாடி. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் தனது பயணத்தை மேற்கொள்கின்றனர். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து வருகிறது. மேலும் ரயில்வே பணி என்பது பலரின் கனவாக உள்ளது. 

அதேநேரத்தில், ரயில்வே இந்தியப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமூக கலாசார பன்முகத்தன்மைக்கும் முதுகெலும்பாக உள்ளது. 

ரயில்வே சுற்றுச்சூழலின் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதும், இந்திய ரயில்வே உலகிலேயே சிறந்த தரமான சேவைகளை வழங்கும் நிறுவனமாக  உருவாக்குவது உங்களைப் போன்ற இளம் அதிகாரிகளின் பொறுப்பாகும். 

ரயில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணங்களின் நினைவுகளை சுமந்துச்செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் குறிப்பாக பயணிகளை உங்கள் விருந்தினர்களாகக் கருதி, சிறந்த சேவை மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். 

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை அதிகப்படுத்த நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். 

இந்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதுமையுடனும் தகவமைப்புடன் சிறந்து விளங்குவதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.