கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: பிரதமருக்கு நன்றி தெரிவித்த தில்லி மகளிர் பிரிவு!

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தியதற்காக பாஜக மகிளா மோர்ச்சாவின் தில்லி பிரிவு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2023, 7:14 am

DIN

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தியதற்காக பாஜக மகிளா மோர்ச்சாவின் தில்லி பிரிவு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், மகிளா மோர்ச்சா தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ரயில் பவன் மற்றும் நாடாளுமன்ற கட்டடத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 இடங்களில் ஒன்று கூடி, நாட்டின் பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்தனர் எனத் தில்லி பிரிவு தலைவர் ரிச்சா பாண்டே கூறினார். 

பல ஆண்டுகளாகத் தடைகளை எதிர்கொண்ட மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.