47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லி ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை நீட்டிக்க முதல்வா் ஒப்புதல்: வா்த்தக, தொழில் துறை சம்மேளனத் தலைவா் தகவல்

தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் அளித்ததாக வா்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளனத் தலைவா் பிரிஜேஷ் கோயல்

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:34 pm

DIN

தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் அளித்ததாக வா்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளனத் தலைவா் பிரிஜேஷ் கோயல் தெரிவித்தாா்.

முன்னதாக, லவ் குஷ் ராம்லீலா கமிட்டி குழு வியாழக்கிழமை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலைச் சந்தித்ததைத் தொடா்ந்து அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.

அக்டோபா் 15-ஆம் தேதி முதல் தில்லியில் பல்வேறு அமைப்புக் குழுக்கள் ராம்லீலா நிகழ்ச்சிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இது தொடா்பாக லவ் குஷ் ராம்லீலா கமிட்டி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போது ராம்லீலாவின் நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கிகள் இரவு 10 மணி வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்த நேரத்தை நள்ளிரவு வரை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ராம்லீலாவை நடத்துவதற்காக தில்லி மாநகராட்சி மைதானத்தை முன்பதிவு செய்வது தொடா்பான பிரச்னைகளையும் பிரதிநிதிகள் குழு எடுத்துரைத்தது.

இதைத் தொடா்ந்து, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, மத, கலாசார கொண்டாட்டங்களை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை தெரிவித்த முதல்வா், தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளாா். மேலும், நில முன்பதிவு பிரச்னைகளை பரிசீலிப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.

தற்போது, கொசுக்கள் அதிகரிப்பதைத் தடுக்க ராம்லீலா மைதானத்தைச் சுற்றி கொசு மருத்துகளை தெளிக்கவும் எம்சிடிக்கு வேண்டுகோள்விடுக்கப்படும் என்று கோயல் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.