ம.பி.யில் போலீஸாருடன் நடைபெற்ற என்கவுன்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மோதலில் ரூ.14 லட்சம் தொகையுடன் சுமார் 25 வயது மதிக்கதக்க நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ம.பி.யில் போலீஸாருடன் நடைபெற்ற என்கவுன்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை!
Published on
Updated on
1 min read

பாலகாட்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மோதலில் ரூ.14 லட்சம் தொகையுடன் சுமார் 25 வயது மதிக்கதக்க நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கம்லு என்று அடையாளம் காணப்பட்ட அந்த நக்சலைட், தடைசெய்யப்பட்ட நக்சலி தலம் தண்ட ததேகாசா பிரிவின் தீவிர உறுப்பினர் என்று தெரியவந்துள்ளது.

ரூப்ஜார் காவல் நிலையத்திற்குட்பட்ட குண்டல்-கோடபார் மற்றும் சவுங்குடா வனப் பகுதிகளில் மாநில காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது இந்த என்கவுண்டர் நடைபெற்றதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய பாலாகாட் காவல்துறை கண்காணிப்பாளர் சமீர் சவுரப், என்கவுண்டரில் மேலும் சில நக்சலைட்டுகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com