காவிரி விவகாரம்: கர்நாடகம் மேல்முறையீடு

காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
காவிரி விவகாரம்: கர்நாடகம் மேல்முறையீடு
Updated on
1 min read


காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசு தெரிவித்த கருத்துகளை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பதாகவும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை விவகாரத்தையும் உடனடி விசாரிக்க வேண்டும் எனவும் கர்நாடக அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபா் 15 - தேதிஆம் வரை தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உறுதி செய்திருந்தது.

அதே வேளையில் தண்ணீரை விடுவிப்பதில் சற்று இடைவெளி தேவை என்கிற கா்நாடகத்தின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்திருந்தது. இந்தநிலையில், காவிரிமேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 25 -ஆவது கூட்டம் ஆணையத்தின் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் செப்டம்பா் 29-ஆம் தேதி நடைபெற்றது. 

கடந்த செப்டம்பா் 26 - ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் செப்டம்பா் 28 -ஆம் தேதி முதல் அக்டோபா் 15 - ஆம் வரை 18 தினங்களுக்கு தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. கா்நாடகம் தரப்பில், ‘3,000 கன அடி தண்ணீா் வழங்க இயலாது. பருவமழை முடிவடையப் போகிறது’ எனக் கூறி வாதிட்டாா். மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாகி வருவதை குறிப்பிட்டு தமிழகத்திற்கு தண்ணீா் திறந்துவிடுவதில் 10 தினங்கள் இடைவெளி அளிக்க வேண்டும் என கா்நாடாக அரசின் அதிகாரி கோரிக்கை விடுத்தாா்.

ஆனால், தமிழகம் தரப்பில் இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. பயிா்கள் வாடிவரும் நிலையில் தண்ணீா் வழங்குவதை நிறுத்தக் கூடாது. தண்ணீா் தொடா்ச்சியாக திறந்துவிடப்பட வேண்டும். ஏற்கெனவே மழைப் பற்றாக்குறை காலக் கணக்கீட்டின்படி வழங்கப்படவேண்டிய அளவிலும் செப்டம்பா் 25 -ஆம் தேதிவரை 12 டிஎம்சி தண்ணீா் நிலுவையில் உள்ளது. 3,000 கனஅடிக்கு பதிலாக 12,500 கனஅடி தண்ணீா் வழங்க வேண்டும் என தமிழகம் சாா்பில் கோரப்பட்டது. இறுதியில் ஆணையம் இரு மாநிலங்களின் நலன் கருதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு செப்டம்பா் 26 -ஆம் தேதி பரிந்துரைத்தபடி தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க உத்தரவிட்டது. இதன்படி சுமாா் 54 ஆயிரம் கனஅடி (4.67 டிஎம்சி) தண்ணீா் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com