நாட்டில் 11 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

நாட்டில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 10,158 ஆக பதிவான நிலையில் இன்று 11,109 ஆக உயர்ந்துள்ளதாக மத்தியசுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 10,158 ஆக பதிவான நிலையில் இன்று 11,109 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது. நாட்டில் கரோனாவுக்கு மேலும் 20 பேர் இறந்த நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,498 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு 5.31 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று 5,356 பேர் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று 6,456 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,86,160 லிருந்து 4,47,97,269 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com