பாகிஸ்தானில் நிலச்சரிவு: 8 பேர் காயம், பலரைக் காணவில்லை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டோர்காம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
பாகிஸ்தானில் நிலச்சரிவு: 8 பேர் காயம், பலரைக் காணவில்லை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டோர்காம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை 3.50-க்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கியதில் மலைப்பகுதியில் இருந்து கற்கள் உருண்டு சாலைகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

சுமார் 60 மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com