கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், 8 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.