மணிப்பூர்: மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு!

மணிப்பூர் விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். 
மணிப்பூர்: மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு!
Updated on
1 min read

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்த நிலையில், மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மணிப்பூர் குறித்து விவாதிக்க மறுத்ததையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் குறித்து விரிவான விவாதம் நடக்கும்போது சில விவரங்கள் வெளிவரும் என்று நம்புகிறோம். பிரதமர் அபைக்கு வரத் தயாராக இல்லை. எங்கள் பேச்சைக் கேட்க அரசு தயாராக இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com