2047-ல் ஹரியாணா மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக மாறும்!

2047ஆம் ஆண்டில் ஹரியாணா மாநிலம் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக மாறும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். 
மனோகர் லால் கட்டார் (கோப்புப் படம்)
மனோகர் லால் கட்டார் (கோப்புப் படம்)
Updated on
1 min read

2047ஆம் ஆண்டில் ஹரியாணா மாநிலம் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக மாறும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். 

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தவர்களுக்கான கடனை நம்மால் செலுத்த இயலாது. ஆனால் அவர்களின் குடும்பத்தினரை பேணி பராமரிப்பதன்மூலம் நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த இயலும். இந்த முயற்சியின் ஒரு படியாக நலவாரியம் அமைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்கள் கண்காணிக்கப்படுகிறது.

ராணுவத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு இழப்பீடு ரூ. 50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக நேர்மை, சமவளர்ச்சி, சகோதரத்துவம் போன்றவற்றிற்கு ஹரியாணா முக்கியத்துவம் அளித்துவருகிறது. மாநில மக்களின் வளர்ச்சிக்கு இடையூறானவைகளை அப்புறப்படுத்துவதே அரசின் முதன்மை வேலை. 2047-ல் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக ஹரியாணா மாறும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com