திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர்

திரிபுரா மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று அந்த மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். 
திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர்
Published on
Updated on
1 min read

திரிபுரா மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று அந்த மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். 

அசாம் ரைபிள்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் சாஹா மூவர்ணக் கொடியை ஏற்றினார். அப்போது அவர் பேசியது, 

போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை திறம்படக் கையாள்வதற்காக காவல்துறையின் குற்றப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 

2022-23ல் திரிபுரா மாநிலத்தில் ரூ.121.37 கோடி மதிப்பிலான பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2018-19ல் சர்வதேச வர்த்தகத்தை விட ஏழு மடங்கு அதிகம் என்று அவர் கூறினார். 

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ஆறு மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.1,200 கோடி முதலீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

திரிபுரா மாநில பெண்களுக்கான அதிகாரமளிக்கும் கொள்கையின் கீழ், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

77வது சுதந்திர தினத்தையொட்டி, திரிபுரா முழுவதும் மாநில அரசு மற்றும் நூற்றுக்கணக்கான பிற அமைப்புகளால் பல்வேறு நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com