வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லியில் காங்கிரஸ் தனித்துப்போட்டி! ஆம் ஆத்மி மீது நம்பிக்கையின்மை?

மக்களவைத் தேர்தலில் தில்லியில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 2:44 pm

DIN

மக்களவைத் தேர்தலில் தில்லியில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி உடன் கூட்டணி அமைக்காமல் தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. 

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் தில்லியின் 7 இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. இதனால், எங்கள் கட்சி வேட்பாளரையே நிறுத்த முடிவு செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டார். 

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.