பிஸ்கெட் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து! 

மேற்கு வங்காளத்தின் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கரக்பூரில் பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 
fire_1008chn_175_1
fire_1008chn_175_1
Published on
Updated on
1 min read

மேற்கு வங்காளத்தின் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கரக்பூரில் பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

காலை 9.15 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலைக்குள் பணியாற்றி வந்த அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com