வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்? ரஜினி காலில் விழுந்ததன் காரணம் கூறிய காங்கிரஸ்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டின் அடுத்த பிரதமர் என்பது போன்ற பேச்சுகள் எழுந்துள்ளன

Published On :2 பிப்ரவரி 2024, 8:22 am IST


உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டின் அடுத்த பிரதமர் என்பது போன்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால்தான் நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தியதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 

இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அதனை முடித்துக்கொண்டு உத்தரப் பிரதேசம் சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தார். அப்போது அவர் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ், எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் பிரதமராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விவாதங்கள் எழுந்து வருகின்றன. இல்லையென்றால் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு செய்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. 

பிரதமர் நரேந்திர மோடியின் காலில் கூட ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில்லை. ரஜினிக்கும் யோகி குறித்து அவ்வாறு தோன்றியிருக்கலாம். எதிர்கால பிரதமர் குறித்த பேச்சுகளில் யோகியின் பெயர் எழுகிறது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.