
தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
வாரங்கல்லுக்கு கிழக்கே 127 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
படிக்க: தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?
இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 4.43 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
பூமிக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...