முதல்வர்களை நியமிப்பதில் தாமதம் ஏன்? காங்கிரஸ் கேள்வி?

சமீபத்திய நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் இதுவரை முதல்வர்களை அறிவிக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 
முதல்வர்களை நியமிப்பதில் தாமதம் ஏன்? காங்கிரஸ் கேள்வி?
Updated on
1 min read

சமீபத்திய நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் இதுவரை முதல்வர்களை அறிவிக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில், 

டிசம்பர் 3-ம் தேதி பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் முதல்வரை நியமிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் அனைவராலும் விமர்சிக்கப்படுவதாக அவர் கூறினார். 

தெலங்கானாவின் ஒருநாள் முன்னதாகவே முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 1 மணிக்குப் பதவியேற்க உள்ளார். 

ஆனால் மூன்று நாள்கள் கடந்தும், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான முதல்வர்களைக் கூட பாஜகவால் அறிவிக்க முடியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com