47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பணி இலக்கை முடிக்காததால் 8 காவலர்களுக்குச் சம்பளம் நிறுத்திவைப்பு!

காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நிறைவு செய்யாததால் அவர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை.

News image
கோப்புப் படம் | ENS
Updated On :7 டிசம்பர் 2023, 7:38 am

DIN

அகர்தலா: திரிபுரா மாநிலம் சிபாஹிஜாலா மாவட்டத்தைச் சேர்ந்த 8 காவலர்களுக்கு இந்த மாதத்துக்கான பணி இலக்குகளை (டார்கெட்) முடிக்காததால் அவர்களுக்கான சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 3 உதவி துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகிய 8 பேர், கடந்த மூன்று மாதங்களாக முடிக்க வேண்டிய வழக்குகளைத் தீர்க்கவில்லை.

ஆகவே, காவல் உயர்கண்காணிப்பாளர் பிஜே ரெட்டி, வழக்கு தீர்த்து வைப்பதில் அலட்சியம் மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ச்சியாக மீறிய காரணங்களுக்காக அவர்களின் சம்பளத்தை நிலுவையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

18 வழக்குகள் டார்கெட் ஆகக் கொடுக்கப்பட்ட நிலையில் 3 வழக்குகளை மட்டுமே இந்தக் காவலர்கள் தீர்த்துள்ளனர்.

வங்க தேசத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தப் பகுதியில் அடிக்கடி, போதை மருந்து கடத்தல், மனிதக் கடத்தல் உள்ளிட குற்றங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.