நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மகாராஷ்டிரத்திலும் ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய திரிபு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை திரிபான ஜேஎன்.1 வகை கரோனா வைரஸ், மகாராஷ்டிரத்தில் பரவியிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனஜி சவந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும், எந்த நிலையையும் எதிர்கொள்ள மாநில சுகாதாரத் துறை தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடி தேவையான மருத்துவ உதவியை பெறுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
கேரளத்திலும் ஜேஎன் 1 திரிபு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர ராஜா நரசிம்மா இது பற்றி பேசுகையில், மாநிலத்தில் ஆறு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது பல மாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு பக்தர்கள் செல்லும் காலம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனாவை வெல்லும் ஒரே சக்தியாக தற்போது முகக்கவசம்தான் உள்ளது. மக்கள் அதனைப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


