போபால்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. லக்ஷ்மன் சிங், ராகுல் காந்தி ஒரு சாதாரண காங்கிரஸ் ஊழியர் மற்றும் எம்.பி. அவரை அவ்வளவாக முன்னிலைப்படுத்த வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் திக்விஜய சிங்கின் தம்பி லக்ஷ்மன் சிங், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும்போது அவர் முகம் தொலைகாட்சிகளில் குறைவாகக் காண்பிக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது லக்ஷ்மன் சிங், “ராகுல் காந்தி ஒரு எம்.பி, அவர் காங்கிரஸ் தலைவர் கிடையாது. ஒரு தொண்டர் மட்டுமே. அதனை தவிர்த்துவிட்டால் அவர் ஒன்றும் இல்லை. நீங்கள் அவரைப் பெரிதுபடுத்துவதே இல்லை. நாங்களும் அதை செய்வதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மற்ற எல்லா எம்.பிக்களையும் போல காங்கிரஸின் ஒரு உறுப்பினர், அவ்வளவுதான் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”ஒருவர் பிறப்பால் தலைவராவதில்லை, தனது செயல்களின் மூலம்தான் தலைவராகிறார். ராகுல் காந்தியைத் தலைவராக கருத வேண்டியதில்லை. நான் அப்படி கருதுவதில்லை. அவர் ஒரு எம்.பி. நீங்கள் பெரிதுபடுத்துகிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்தக் கொடுமையில் பிரதமருக்கும் பங்கிருக்கிறது!: ராகுல் காந்தி
கடந்த மாதம் நடந்த மத்திய பிரதேச தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லக்ஷ்மன் சிங் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் ஸ்ரீ திருமலை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

இந்தியா - ரஷியா இடையே 100 பில்லியன் டாலா் வா்த்தக இலக்கு- அதிபா் மாளிகை தகவல்

கூடலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



