சண்டிகர்: ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த மேஜர் நவ்நீத் வாட்ஸ், ராணுவப் பணியின்போது இறந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. அவரது மகள் இனயத் வாட்ஸ் இன்று ராணுவத்தில் இணைந்துவிட்டார்.
மூன்றாவது தலைமுறையாக இனயத் வாட்ஸ் தற்போது ராணுவப் பணியில் சேர்ந்திருக்கிறார். அவரது தாத்தாவும் ஒரு ராணுவ வீரர்தான், தனது குடும்பப் பெருமையைக் காக்க, இரண்டரை வயதில் தனது தந்தையை இழந்து 20 ஆண்டுகள்.. இன்று அவரும் ஒரு ராணுவ அதிகாரி.
இதையும் படிக்க.. பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
இனயத் வாட்ஸ் தனது பெற்றோருக்கு ஒரே மகள். அவருக்கு 2.5 வயதாக இருக்கும் போதே, தனது அன்பு தந்தை இந்த நாட்டுக்காகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தார். தனது தந்தையின் முகம் கூட நினைவிருக்காத வயதில் தந்தையை இழந்த துயரத்தில் அவர் துவண்டுவிடவில்லை. தானும் வளர்ந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவைக் காணத் தொடங்கிவிட்டார்.
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் வரும் ஏப்ரல் மாதம் ராணுவ பயிற்சிக்காக இணையவிருக்கிறார்.