நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக ஏற்கெனவே 2 நாட்கள் முடங்கிய நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
இதையும் படிக்க- உ.பி.யில் பசு கடத்தல் வழக்கில் 120 பேர் கைது
காங்கிரஸ், திமுக, திரிணமூல், சிவசேனை, இடதுகாரி உள்ளிட்ட கட்சிகள் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தின. இதனிடையே அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக இன்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் திருச்சி சிவாக நோட்டீஸ் அளித்துள்ளார்.