உ.பி.யில் பசு கடத்தல் வழக்கில் 120 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் பசு கடத்தல் வழக்குகள் தொடர்பாக 120 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தில் பசு கடத்தல் வழக்குகள் தொடர்பாக 120 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்ட 120 பேரில் 110 பேர் தடுப்பு நடவடிக்கையிலும், 10 பேர் பசு வதை வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். பரேலி மாவட்டத்தின் 29 காவல் நிலையங்களிலும் பிரசாரம் செய்து பசுவதையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பரேலி போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மாட்டிறைச்சி மற்றும் பசுவைக் கொல்லும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. 

எஸ்எஸ்பி அகிலேஷ் சௌராசியாவின் அறிவுறுத்தலின் பேரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக  எஸ்பி ரூரல் ராஜ்குமார் அகர்வால் தெரிவித்தார். அகர்வால் மேலும் கூறுகையில், மாவட்டத்தில் அதிகரித்து வரும் பசு வதை வழக்குகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பரேலியில் பசு வதை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதனால், இந்து அமைப்புகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. பல நேரங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது. இதைத் தொடர்ந்து, எஸ்எஸ்பி அனைத்து நிலையப் பொறுப்பாளர்களுக்கும் கடுமையான உத்தரவுகளை வழங்கினார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com