/
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்தது. வெப்பத்தால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்நிலையில் சத்தியமங்கலம் நகரம் மற்றும் புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சுமாா் 1 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சத்தியமங்கலம் - கோவை சாலை, பவானிசாகா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
இந்த மழை, சத்தியமங்கலம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிா்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி நகரில் இடியுடன் கூடிய கனமழை

ஆத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை

விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
கருங்கல்லில் சாரல் மழை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



