கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாளமாகத் தனி மெட்டு! எங்கே தெரியுமா?

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள ஒரு கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மெட்டு போடப்படுகிறது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2023, 11:56 am IST

வாழ்நாள் முழுவதும் ஒரு பரிசைப் பெறுவது எவ்வளவு அதிர்ஷ்டம்! ஆம், நம் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மெட்டு போடப்படுகிறது. அந்த ஒரு மெட்டு அந்த ஒரு குழந்தைக்கானது மட்டுமே என்பது சிறப்புத் தகவல். 

வடகிழக்கு இந்தியாவில் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணி நேர பயணத் தொலைவில் உள்ளது காங்தாங் என்றொரு கிராமம். 

இங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்யேக மெட்டு உருவாக்கப்படுகிறது. ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் (மூதாதையரின் நினைவாக பாடல்) என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவது இதன் சிறப்பு. 

விசில் அடிப்பதைப் போன்ற அந்த மெல்லிசை அந்த குழந்தையின் அடையாளமாகிறது. மெட்டிற்கேற்ப குழந்தைக்கும் பெயர் சூட்டுகிறார்கள். அதிகாரப்பூர்வ பதிவுகளுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. 

இந்த தனித்துவமான மெட்டு சில வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை இருக்கும். தாய் குழந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்தும் மெட்டாக இது பார்க்கப்படுகிறது. குழந்தை மீதான தாயின் காதல் பாடல் இது. ஒரு குழந்தைக்கான மெட்டு மற்றொரு குழந்தைக்கு இருக்காது என்பதால் தனித்துவமான இந்த மெட்டுகள் ஆச்சரியப்படுத்துகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.