நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

மும்பை ஐஐடி மாணவர் தற்கொலையை விசாரிக்க சிறப்புக் குழு! 

முப்பை ஐஐடி மாணவர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை(எஸ்ஐடி) மகாராஷ்டிர அரசு நியமித்துள்ளது. 

கோப்புப் படம்

Published On :7 பிப்ரவரி 2024, 12:07 pm IST

முப்பை ஐஐடி மாணவர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை(எஸ்ஐடி) மகாராஷ்டிர அரசு நியமித்துள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், 

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி(18) ஐஐடியில் பி.டெக் படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிப்.12 அன்று வளாகத்தில் அமைந்துள்ள விடுதி கட்டடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

மாணவன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஐஐடி.யில் பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, சோலங்கியின் மரணம் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

பிப்ரவரி 24 அன்று, சோலங்கியின் மரணம் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது- காவல்துறை இணை ஆணையர் (குற்றம்) லக்மி கௌதம் தலைமையிலான எஸ்ஐடி, வழக்கை மறுபரிசீலனை செய்து, சோலங்கியின் பெற்றோர், நிறுவன அதிகாரிகள் மற்றும் சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த மாணவர்களின் வாக்குமூலங்களை போலீஸார் பதிவு செய்து வருகின்றனர். 

இந்த வழக்கில் தற்போது எஸ்ஐடி விசாரணை நடத்தும் என்று அந்த அதிகாரி கூறினார். 

சோலங்கியின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பிப்ரவரி 16ஆம் தேதி மும்பை போலீஸ் குழு குஜராத் சென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.