தில்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.
புது தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயை அணைத்து, 6 பேர் கட்டிடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காலை 7 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.