புது தில்லி: 2022 டிசம்பர் மாதத்திற்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,49,507 கோடியாகவும், 11 ஆவது முறையைாக ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் அதிகரித்துளளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, 2022 டிசம்பருக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,49,507 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், மத்திய அரசின் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) வருவாய் ரூ.26,711 கோடியாகவும், மாநில அரசுகளின் சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) வருவாய் ரூ.33,357 கோடி, மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.78,434 கோடியாகவும், செஸ் வரியாக ரூ.11,005 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மத்திய அரசு ரூ.36,669 கோடியை சிஜிஎஸ்டிக்கும், ரூ.31,094 கோடியை எஸ்ஜிஎஸ்டிக்கும் ஐஜிஎஸ்டியில் இருந்து வழக்கமாக பகிர்ந்தளித்துள்ளது.
டிசம்பர் 2022 இல் வழக்கமான பகிர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ 63,380 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ 64,451 கோடி.

2022 டிசம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட 15 சதவீதம் அதிகரிப்பாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் உள்நாட்டு வா்த்தக நடவடிக்கைகள் மூலமான (சேவைகளின் இறக்குமதி உள்பட) வருவாய் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 நவம்பரில் 7.9 கோடி இ-வே ரசீதுகள் உருவாக்கப்பட்டது, இது 2022 அக்டோபரில் உருவாக்கப்பட்ட 7.6 கோடி இ-வே ரசீதுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மாா்ச்சில் இருந்து தொடா்ந்து பத்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் கூகுள் 11 ஸ்மார்ட்போன்! சிறப்புகள் என்னென்ன?

எமோஷனல் இன்டெலிஜென்ஸ்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



