அயோத்தி: ஆச்சரியமளிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெறும் ராகுல் தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயிலின் தலைமை ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், "நீங்கள் இந்த நாட்டுக்காக செய்யும் அனைத்துப் பணியும் அனைவரின் நலத்துக்காகவே. எனது வாழ்த்துகள் எப்போதும் உங்களுக்கு" என்று சத்தியேந்திர தாஸ் எழுதிய கடிதத்தை இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் அளித்துள்ளார்.
மேலும், "கடவுள் ராமரின் அருளாசியும் எப்போது உன்னுடன் இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுகிறேன்: காயத்ரி ரகுராம்
இது குறித்து ஹனுமன் கோயில் பூசாரி ராஜூ தாஸ் கூறுகையில், இது அவரது தனிப்பட்ட கருத்து. அவரது கருத்துடன் ஒத்துப்போக முடியாது. காங்கிரஸ் எப்போதுமே இந்து மதத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.