பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ராகுலின் நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி வாழ்த்து

ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயிலின் தலைமை ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ராகுலின் நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி வாழ்த்து

Published On :6 பிப்ரவரி 2024, 6:22 pm IST


அயோத்தி: ஆச்சரியமளிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெறும் ராகுல் தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயிலின் தலைமை ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி நடைபெறவிருக்கிறது. 

இந்த நிலையில், "நீங்கள் இந்த நாட்டுக்காக செய்யும் அனைத்துப் பணியும் அனைவரின் நலத்துக்காகவே. எனது வாழ்த்துகள் எப்போதும் உங்களுக்கு" என்று சத்தியேந்திர தாஸ் எழுதிய கடிதத்தை இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் அளித்துள்ளார்.

மேலும், "கடவுள் ராமரின் அருளாசியும் எப்போது உன்னுடன் இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஹனுமன் கோயில் பூசாரி ராஜூ தாஸ் கூறுகையில், இது அவரது தனிப்பட்ட கருத்து. அவரது கருத்துடன் ஒத்துப்போக முடியாது. காங்கிரஸ் எப்போதுமே இந்து மதத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.