செப்டம்பருக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு?

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
செப்டம்பருக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு?

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் நிலையில், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் கரோனா பெருந்தொற்றின் காரணமாக நடைபெறவில்லை.

இந்நிலையில், பதிவாளா் ஜெனரல் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் அனைத்து மாநில அரசுகளுக்கு எழுதிய உள்ள கடிதத்தில், ‘ நிகழாண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிா்வாக எல்லையில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளலாம். மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்தான அறிக்கைகளை மாநிலங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இயக்குநரத்துக்கும், யூனியன் பிரதேசங்கள் தில்லியில் உள்ள சம்பந்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிா்வாக எல்லை மறுவரையறை நிறுத்தப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கலாம் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், செப்டம்பருக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com