2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) வழங்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த சமூகமாக மாற்றும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்.
இதையும் படிக்க: சோனியா காந்தி உடல்நிலை குறித்து மருத்துவமனை தகவல்
அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த டிஜிட்டல் இந்தியா விருதுகள் இந்த முறை, முதல் முறையாக தொழில் தொடங்கி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.