ஜோஷிமட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆண்டுக்கு 2.5 அங்குலம் புதையுண்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு டேராடூனைச் சேர்ந்த கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
உத்தரகண்டில் உள்ள ஜோஷிமட் நகரப் பகுதிகள் புதைந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுவருகிறது. அங்கு மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 678-ஆக உயா்ந்துள்ளது. அங்கிருந்து இதுவரை 82 குடும்பங்கள் நகரின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ஜோஷிமட்டிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதியும் விரிசல் விட ஆரமித்துள்ளது.
2020 ஜூலை முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்யும்போது ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே மெல்ல மெல்ல புதைந்து வருவது தெரியவந்துள்ளது.
அதாவது ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆண்டுதோறும் 6.5 செ.மீ. அல்லது 2.5 அங்குலம் புதைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆழ்வாா்திருநகரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

நாசரேத்தில் அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல்: நகரச் செயலா் உள்பட 2 மீது வழக்கு

சாத்தான்குளம் அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


