வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஐ-போன் உற்பத்தி ஆலையை வாங்குகிறது டாடா நிறுவனம்!

இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :10 ஜனவரி 2023, 11:56 am

இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக செய்தி நிறுவனமான புளூம்பர்க் அளித்துள்ள தகவலின்படி, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவடையும். ஐ-போன் உற்பத்தி செய்யும் இந்தியாவிலேயே செய்யும் முதல் நிறுவனமாக விஸ்ட்ரான் உள்ளது. விஸ்ட்ரான் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர்கள் (ரூ.4,920 கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது. 

விஸ்ட்ரான் நிறுவனம் தாய்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஐ-போன் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கினால், ஐ-போனை இந்தியாவில் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.