முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டுதுரோகத்தை வீழ்த்துவோம்! அதிமுகவைக் கட்டிக் காப்போம்! - எடப்பாடி பழனிசாமிஅமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை! விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? தேர்தல் பிரசார நிலையிலிருந்து முதல்வர் விஜய் வெளியே வர வேண்டும்! தமிழிசை திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்; தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோ
/

ஐ-போன் உற்பத்தி ஆலையை வாங்குகிறது டாடா நிறுவனம்!

இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :10 ஜனவரி 2023, 5:26 pm IST

இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக செய்தி நிறுவனமான புளூம்பர்க் அளித்துள்ள தகவலின்படி, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவடையும். ஐ-போன் உற்பத்தி செய்யும் இந்தியாவிலேயே செய்யும் முதல் நிறுவனமாக விஸ்ட்ரான் உள்ளது. விஸ்ட்ரான் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர்கள் (ரூ.4,920 கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது. 

விஸ்ட்ரான் நிறுவனம் தாய்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஐ-போன் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கினால், ஐ-போனை இந்தியாவில் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.