தேர்தல் பிரசார நிலையில் இருந்து வெளியே வாருங்கள் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
"முதல்வர் விஜய், திருச்சிக்கு சென்று பேசினார். அவர் தேர்தல் பிரசார நிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.
முதல்வர் ஆகிவிட்டார். மக்கள் உங்களுக்கு வாய்ப்புகளையும் வாழ்த்துகளையும் கொடுத்துள்ளார்கள். உடனே, போர்க்கால அடிப்படையில் பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நான் கோயம்பேடு வழியாகத்தான் வந்தேன். கார் ஏற்றி, இலங்கை பெண் கொல்லப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
6 மாதம் எதிர்க்கட்சிகள் அமைதியாக இருப்பதாகச் சொன்னார்கள் என்று கூறுகிறார். எதிர்க்கட்சிகள் சொல்லத்தான் செய்வார்கள். முதல்வர் விஜய், பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். வேறு கட்சியில் இருந்து மற்றவர்களை சேர்க்கும் கவனத்தை பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் செலுத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இந்த புதிய அரசு இன்னும் வேலையைத் தொடங்கவே இல்லை. பிளாக் - ஒயிட்டில் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். முழுவதும் பிளாக்காக ஆகிவிடக் கூடாது" என்று பேசியுள்ளார்.
Summary
TN BJP Senior Leader Tamilisai Soundararajan advises Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸிடம் Vijay ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! |Tamilisai Soundararajan | BJP
முதல்வர் விஜய்யின் முதுகில் குத்த காங்கிரஸ் தயங்காது: தமிழிசை
ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்! திருமாவளவன் பேரம் பேசுகிறார்! தமிழிசை

தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



