வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு மொத்த விலை பணவீக்கம் சரிவு!

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கமானது 4.95 சதவிகிதமாக குறைந்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2023, 3:24 pm IST

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கமானது 4.95 சதவிகிதமாக குறைந்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஓராண்டாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், டிசம்பர் மாதம் 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த நவம்பர் மாதத்தில் 5.85 சதவிகிதமாக இருந்த மொத்த விலை பணவீக்கமானது டிசம்பரில் 4.95 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த 2021 டிசம்பரில் மொத்த விலை பணவீக்கம் 14.27 சதவிகிதாக இருந்தது.

உணவு பொருள்கள், கனிம எண்ணெய், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஜவுளி, ரசாயனம் மற்றும் ரசாயன பொருள்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததே மொத்த விலை பணவீக்கம் கணிசமாக குறைந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது எனத் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2021-ல் 4.95 சதவிகிதமாக இருந்த மொத்த விலை பணவீக்கமானது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 5 சதவிதத்திற்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.