பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தேசத்தை ஒன்றிணைக்கவே ராகுல் காந்தி நடைப்பயணம்: ஹிமாசல் முதல்வர்

தேசத்தை ஒன்றிணைக்கவே ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளதாக என்று ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளளார்.

News image
Updated On :23 ஜனவரி 2023, 8:52 am IST

தேசத்தை ஒன்றிணைக்கவே ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளதாக என்று ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளளார்.

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவுக்கு எதிரான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பதிலளித்த ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, "பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, ஆனால் ராகுல் காந்தி தேசத்தை ஒன்றிணைப்பதற்காகவே நடைப்பயணம் செய்கிறார். அவர் 3,500 கிமீ நடந்து வருகிறார். குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளோம். 

கடந்த முறை தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவர்களை சந்திக்க முடியவில்லை. ஹிமாசல் முதல்வராக பதவியேற்ற பிறகு அவர்கள் இருவரையும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும் என்றார். முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் சிங்ரெளலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடெங்கும் வெறுப்புணா்வு நிலவுவதாக இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி கூறி வருகிறாா். 

வெறுப்புணா்வை தூண்டுவது யாா் என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். பிரதமா் வெறுப்புணா்வை தூண்டுகிறாரா? வெறுப்புணா்வு இருப்பதை ராகுல் காந்தி எங்கு பாா்த்தாா்?. மக்களிடம் சென்று பிரதமருக்கும் பாஜகவுக்கும் எதிராக ராகுல் காந்தி வெறுப்புணா்வை தூண்டுகிறாா். இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.