புனே: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மரணத்தில், திடீர் திருப்பமாக, அவர்களை திட்டமிட்டுக் கொலை செய்தக் குற்றத்துக்காக நான்கு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனே மாவட்டம் தௌந்த் அருகே ஓடிக் கொண்டிருக்கும் பிமா ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
முதலில், தற்கொலையாகக் கருதப்பட்ட இந்த சம்பவத்தில், மரணம் அடைந்த 50 வயது நபரின் உறவினர்கள் நான்கு பேர் கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரின் மகன் சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். ஆனால், அது சாலை விபத்து அல்ல, தனது உறவினர்தான் கொலை செய்துவிட்டதாக அவர் கருதினார். இதனால், அந்த நபர் தனது மூன்று சகோதரர்களுடன் இணைந்து திட்டம் தீட்டி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும், ஜனவரி 18ஆம் தேதி, 50 வயது நபர், அவரது மனைவி, மகள், மருமகன், மூன்று பேரப்பிள்ளைகளை பிமா ஆற்றில் தள்ளிக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



