ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தற்கொலையல்ல.. திட்டமிட்டக் கொலை: 7 பேர் மரணத்தில் திடீர் திருப்பம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மரணத்தில், திடீர் திருப்பமாக, அவர்களை திட்டமிட்டுக் கொலை செய்தக் குற்றத்துக்காக நான்கு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஜனவரி 2023, 4:39 pm IST

புனே: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மரணத்தில், திடீர் திருப்பமாக, அவர்களை திட்டமிட்டுக் கொலை செய்தக் குற்றத்துக்காக நான்கு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனே மாவட்டம் தௌந்த் அருகே ஓடிக் கொண்டிருக்கும் பிமா ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

முதலில், தற்கொலையாகக் கருதப்பட்ட இந்த சம்பவத்தில், மரணம் அடைந்த 50 வயது நபரின் உறவினர்கள் நான்கு பேர்  கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரின் மகன் சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். ஆனால், அது சாலை விபத்து அல்ல, தனது உறவினர்தான் கொலை செய்துவிட்டதாக அவர் கருதினார். இதனால், அந்த நபர் தனது மூன்று சகோதரர்களுடன் இணைந்து திட்டம் தீட்டி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும், ஜனவரி 18ஆம் தேதி, 50 வயது நபர், அவரது மனைவி, மகள், மருமகன், மூன்று பேரப்பிள்ளைகளை பிமா ஆற்றில் தள்ளிக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.