தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஷ்ரத்தாவைக் கொன்றுவிட்டு அஃப்தாப் செய்த துணிச்சலான செயல்

ஷ்ரத்தா வாக்கரை கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசிய வழக்கில், அஃப்தாப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜனவரி 2023, 4:24 pm IST


புது தில்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரை கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசிய வழக்கில், அஃப்தாப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

அந்த வரிசையில், ஷ்ரத்தா வாக்கரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அதனை இமாசலில் வீச அஃப்தாப் திட்டமிட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.

இருவரும், கொலை நிகழ்வதற்கு முன்பு, இமாசலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்று சில நாள்கள் தங்கியிருந்தனர். இதனால், அப்பகுதியில் உடல்களை வீசுவது குறித்து அஃப்தாப் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக மிகப்பெரிய கருப்பு நிறப் பையை ரூ.1,200 கொடுத்து வாங்கியதும், பல்வேறு கார் ஓட்டுநர்களை தன்னை தில்லியில் இருந்து இமாசல் அழைத்துச் செல்லுமாறு கேட்டும், அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காரில் சென்றாலும் கூட, வழியில் தான் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் அஃப்தாப் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகுதான், நண்பர் பத்ரியின் வீட்டுக்கு அருகே வனப்பகுதிகள் இருப்பது தெரிந்து, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை அங்கு வீசுவது என முடிவு செய்துள்ளார் அஃப்தாப்.

இதற்கிடையே, ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட பிறகு 10 முதல் 12 நாள்கள் அவரது கைப்பேசியை அஃப்தாப் பயன்படுத்தியுள்ளார். உடனடியாக அதனை அணைத்து வைத்துவிட்டால் யாருக்கும் சந்தேகம் வந்துவிடும் என்பதாலும், உடல் பாகங்களை வீசும் வரை அவர் உயிரோடு இருப்பது போல தெரியப்படுத்த வேண்டும் என்றும் இதனை செய்துள்ளார்.

இதனால், கைப்பேசி பயன்பாட்டை வைத்து, ஷ்ரத்தா எப்போது கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்ய முடியாமல் காவல்துறையினருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, ஷ்ரத்தா வாக்கர் அவ்வப்போது பேசும் நபர்களுக்கு அவரது கைப்பேசியிலிருந்து அழைப்பை மேற்கொள்ளும் அஃப்தாப், எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு அணைத்து விடுவாராம். அதுபோல ஷ்ரத்தாவுக்கு யாரேனும் போன் செய்தாலும் எடுத்து, எதுவும் பேசாமல் பிறகு அணைத்து விடுவாராம். இதனால், பலருக்கும் ஷ்ரத்தாவின் கைப்பேசி சிக்னல் சரியாக இல்லை என்றுதான் தோன்றியிருக்குமே தவிர, அவர் உயிரோடு இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கவே செய்யாது என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.