ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! தில்லி மக்களுக்கு எச்சரிக்கை!!

ஹரியாணாவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தில்லியிலுள்ள யமுனை ஆறு முழுவதுமாக நிரம்பி அபாய கட்டத்தை எட்டியுள்ளது. 

News image
Updated On :10 ஜூலை 2023, 2:06 pm

DIN


ஹரியாணாவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தில்லியிலுள்ள யமுனை ஆறு முழுவதுமாக நிரம்பி அபாய கட்டத்தை எட்டியுள்ளது. 

தில்லியில் தொடர் மழை பெய்து வருவதால் யமுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி யமுனா நதியில் அபாயகட்டமான 205.33 மீட்டர் உயரத்தை எட்டியதாக அம்மாநில பேரிடர் மீட்புத் துறை அறிவித்துள்ளது. 

தில்லி பழைய ரயில்வே பாலத்தில் 205.4 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஹரியாணாவிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், யமுனை ஆற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹரியாணாவிலிருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. 

இது தொடர்பாக பேசிய தில்லி அமைச்சர் செளரப் பரத்வாஜ், தில்லி அரசு தயாராகவுள்ளது. மழை வெள்ள பாதிப்பு எச்சரிக்கையிலிருந்து காக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.