தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
17-ஆவது நாடாளுமன்றத்தின் 12 -ஆவது (மழைக்காலக் கூட்டம்) அமா்வு நாளை(ஜூலை 20) முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடா் தற்போதைய (பழைய) நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற இருக்கிறது.
மொத்தம் 17 அமா்வுகளுக்கான இந்த கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற மொத்தம் 28 மசோதாக்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 21 மசோதாக்கள் இரு அவையிலும் புதிதாத அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியது:
“மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த விரும்புகிறோம். இரண்டாவதாக மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை கொண்டு ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவோம்.
இதையும் படிக்க | நீட்: மீண்டும் மீண்டும் தேர்வெழுதியோர் ஆதிக்கம்
மூன்றாவதாக விலை உயர்வு, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை குறித்த பிரச்னையை எழுப்புவோம். தில்லி அவசர சட்டத்தை எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



