உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சுதந்திர இந்தியாவில் மணிப்பூர் நிகழ்வுகள் மிகுந்த அச்சத்தை அளிக்கிறது: திரிணமூல் காங்கிரஸ்

சுதந்திர இந்தியாவில் மணிப்பூரில் நிகழும் சம்பவங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாகவும் மணிப்பூரில் ஆளும் பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

Published On :6 பிப்ரவரி 2024, 6:34 pm IST

சுதந்திர இந்தியாவில் மணிப்பூரில் நிகழும் சம்பவங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாகவும் மத்தியில் மற்றும் மணிப்பூரில் ஆளும் பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

மணிப்பூர் வன்முறையை மத்திய, மாநில பாஜக அரசு கையாளும் விதத்தையும் திரிணமூல் கடுமையாக கண்டித்துள்ளது. மணிப்பூரில் குகி இனப் பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி நாடு முழும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து திரிணமூல் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக திரிணமூல் சார்பில் கூறியதாவது: கலவரத்தால் பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் செல்லாமல் இருக்க காரணம் என்ன? பிரதமரை மணிப்பூருக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவது எது? வெட்கமற்ற பாஜக! வெட்கமற்ற மணிப்பூர் மாநில அரசு. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இப்போது எங்கு சென்றன? இதற்கெல்லாம் மக்கள் தேர்தலில் சரியான பதிலை பாஜகவுக்கு அளிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, மணிப்பூரில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.